மானாமதுரை அருகே செத்து மிதந்த மீன்கள்
மானாமதுரை : மானாமதுரை என்.பெருங்கரை அருகே இடையன் கண்மாயில் வெயில் காரணமாக மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.மானாமதுரை பில்லத்தி அருகே உள்ள என். பெருங்கரை இடையன் கண்மாயில் ஏராளமான மீன்கள் வளர்கின்றன. கடந்த சில வாரங்களாக வெயில் காரணமாக கண்மாயில் தண்ணீர் வற்றி வருவதை தொடர்ந்தும்,வெப்பம் காரணமாக மீன்கள் செத்து மிதக்கின்றன. துர்நாற்றம் வீசுவதால் மீன்களை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.