உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் தாயை தாக்கிய டிஸ்மிஸ் போலீஸ் கைது

சிவகங்கையில் தாயை தாக்கிய டிஸ்மிஸ் போலீஸ் கைது

சிவகங்கை: சிவகங்கை காமராஜர் நகர் முத்துச்சாமி மனைவி வள்ளியம்மாள் 65. முத்துச்சாமி எஸ்.பி., அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கண்ணன் 37. இவர் போலீசாக பணிபுரிந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர். கடந்த திங்கட்கிழமை வள்ளியம்மாளுக்கும் கண்ணனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது தாய் வள்ளியம்மாளை இரும்பு கம்பியால் தாக்கினார். காயம் அடைந்தவரை அருகில் இருந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்தவமனையில் சேர்த்தனர். சிவகங்கை போலீசார், தாயை தாக்கிய சஸ்பெண்ட் போலீஸ் கண்ணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை