உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண் கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை

பெண் கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே பெண்ணை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மகிளா நீதிபதி தீர்ப்பு அளித்தார். சாக்கோட்டை அருகே செங்காத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை 45 விவசாயி. இவரது மனைவி இந்திரா 40. இவர்களுக்கு 3 பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 2012 டிச.,11 மாலை 6:00 மணி அளவில் சோலை ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்தார். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சோலை வெளியே சென்று விட்டார். இந்திரா தன்னுடைய கணவரை தேடி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் அதிகாலை இந்திரா வயல் பகுதியில் பிணமாக கிடந்தார். இது குறித்து சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணன் 37, மற்றும் பாண்டி 35 இருவரும் அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணையின் போது பாண்டி இறந்தார். வழக்கை நீதிபதி கோகுல் முருகன் விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை