மேலும் செய்திகள்
பாலியல் வழக்கு: தொழிலாளிக்கு சிறை
08-Apr-2025
சிவகங்கை : சிவகங்கையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி உத்தரவிட்டார்.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் செல்லையா 88. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு 2021 டிச.2 தேதி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து முதியவர் செல்லையாவை கைது செய்தனர்.இந்த வழக்கு சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி கோகுல் முருகன் விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் தனலட்சுமி ஆஜர் ஆனார். செல்லையாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 3 ஆயிரம் அபராதமும் விதித்து மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
08-Apr-2025