உழவர் நல சேவை மையம்
மானாமதுரை: மானாமதுரையில் தோட்டக்கலை, மலை பயிர்கள் துறை சார்பில் முதல்வரின் உழவர் நல சேவை மையத்தை தோட்டக்கலை துணை இயக்குனர் சத்யா, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி துவங்கி வைத்தனர். உழவர் நல சேவை மைய உரிமையாளர் பிரபாவதி, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் தர்மர், சுகன்யா மற்றும் அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.