உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருதிப்பட்டியில் மீன்பிடி திருவிழா

மருதிப்பட்டியில் மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடித் திருவிழாவில் அதிக மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.மருதிப்பட்டி ஊராட்சி மருதிக் கண்மாய் ஆயக்கட்டு பகுதிகளில் அறுவடைப்பணிகள் முடிவுற்ற நிலையில் மீன்பிடித் திருவிழா நேற்று நடந்தது.காலை 8:30 மணிக்கு ஆயக்கட்டுதாரர்கள் வெள்ளைத் துண்டு வீசி மீன்பிடி விழாவை துவக்கினர். கரைகளில் காத்திருந்த பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஊத்தா, பரி, வலை, சேலை உள்ளிட்ட உபகரணங்களுடன் இறங்கி மீன்களை பிடித்தனர். இதில் பலருக்கும் கெண்டை, கெளுத்தி, விரால் என கூடை நிறைய மீன்கள் கிடைத்தது. இதனால் மீன்பிடித் திருவிழாவிற்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை