மீன்பிடித்திருவிழா
சிங்கம்புணரி: கிருங்காக்கோட்டை ஊராட்சி பொல்லாகுளம் ஊருணியில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. நேற்று காலை 8:30 மணிக்கு கிராம பிரமுகர்கள் வெள்ளைத் துண்டு வீசி மீன்பிடித் திருவிழாவை துவக்கி வைத்தனர். கரைகளில் காத்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி ஊத்தா, பரி, வலை, சேலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.