பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா துவக்கம்; ஜூலை 11ல் சந்தனக்காப்பு அலங்காரம்
சிவகங்கை; சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் கொடியேற்றம், காப்பு கட்டுடன் பூச்சொரிதல் விழா நேற்று துவங்கியது. ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் நேற்று காலை 9:15 முதல் 9:40 மணிக்குள் கொடியேற்றத்துடன் பூச்சொரிதல் விழா துவங்கியது. அம்மனுக்கு காப்பு கட்டி, சிறப்பு பூஜை செய்தனர். நேற்று மாலை 4:45 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து பூக்கரகம் எடுத்து ஊர்வலமாக பிள்ளைவயல் காளி கோயிலுக்கு வந்தனர். மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் சன்னதி முன் பூக்குழி இறங்கி நேர்த்தி செலுத்தினர். அம்மனுக்குசிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். ஜூலை 9ம் தேதி காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை, அதற்கு பின் அம்மன் திருவீதி உலா நடைபெறும். ஜூலை 11 அன்று காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு பாலபிேஷகம், சகல அபிேஷகம்,நைவேத்தியம் நடைபெறும். சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்வார். நகரின் பல்வேறு வீதிகளில் இருந்து பெண்கள் பூத்தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக பிள்ளைவயல் காளி கோயிலுக்கு வந்து, அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்துவர்.