உணவுத்திருவிழா
சிவகங்கை: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உணவுத்திருவிழா நடந்தது.பள்ளி செயலர் சேகர் தமிழர்களின் பாரம்பரிய உணவு பற்றி மாணவர்களிடம் பேசினார். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் தியாகராஜன், உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன் சரவணன், பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், மகரஜோதி, சக்திவேல், ஜெயமணி, சுதிசந்திரன், மழலையர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்து பஞ்சவர்ணம், பொறுப்பாசிரியர் பாண்டிச்செல்வி செய்திருந்தனர்.