தலைமை காவலர், எஸ்.ஐ., மோதல்; இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றம்
சிவகங்கை: சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணி புரிபவர் பால முரளி 42. இவரை அதே போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரியும் செல்வபிரபு, ஜாதி ரீதியாக துன்புறுத்துவதால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்தால் அதற்கு செல்வபிரபு தான் காரணம் என்று பேசி வெளியிட்ட ஆடியோ வலைதளங்களில் பரவியது. பாலமுரளி மீண்டும் ஆடியோ வெளியிட்டு மன வருத்தத்தில் ஆடியோ வெளியிட்டு விட்டதாகவும், வேறு யாருக்கும் பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளார். இருவரையும் ஆயுத படைக்கு மாற்றி எஸ்.பி.,சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.