சிறுகூடல்பட்டியில் பிப்.3ல் கும்பாபிஷேகம்
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் சிறுகூடல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகரச்சிவன் கோயிலில் நடைபெற்ற திருப்பணியில் கோயிலைச் சுற்றி புதிதாக கிரிவலம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி முடிந்து பிப். 3ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள் நாளை காலை 8:15 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. பூஜை பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் நடக்கிறது. மாலை 4:45 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜையும் துவங்குகிறது.பிப். 1ல் காலையில் 2ம் கால யாக பூஜையும், மாலையில் 3ம் கால யாகபூஜையும், பிப்.2 காலையில் 4ம் காலமும், மாலையில் 5ம் கால யாகபூஜையும் நடைபெறும். பிப்.3 காலை 7:15 மணிக்கு ஆறாம் காலயாக பூஜையும், காலை 9:50 மணிக்கு விமான கும்பாபிேஷகமும் நடைபெறும். பின்னர் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெறும். இரவில் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்தி உலா நடைபெறும்.