இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிேஷகம்
இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் இன்று நவ.3ம் தேதி மகா கும்பாபிஷேக விழாவும், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் திருப்பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக அக்.31ம் தேதி காலை 8:00 மணி முதல் 10:30 மணிக்குள் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன், மாலை 6:00 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜை துவங்கியது. இதனை தொடர்ந்து 4நாட்கள் 6 கால யாக சாலை மற்றும் பல்வேறு பூஜைள் நடைபெற்றன. இன்று நவ.3ம் தேதி காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 9:30 முதல் 10:25 மணிக்குள் மூலஸ்தானம், ராஜகோபுரம், பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடைபெற உள்ளது. மாலை 5:00 மணிக்கு ஞானாம்பிகை சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கல்யாணமும், இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறும்.