காட்டுப்பன்றி தாக்கியவர் பலி
இளையான்குடி:சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முட்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சோலைமலை மகன் பாரதி 45, இவர் பரமக்குடியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார்.டிச.,16 அதிகாலை இவர் வீட்டிலிருந்து பரமக்குடிக்கு டூவீலரில் வேலைக்கு சென்றார். உப்புகேணி என்ற இடத்தில் காட்டுப்பன்றி டூவீலர் மீது மோதி அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்த பாரதி மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்.