உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா: பக்தர்கள் பங்கேற்பு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா: பக்தர்கள் பங்கேற்பு

இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனியில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பொங்கல் விழாவில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை தரிசனம் செய்வர்.இந்நிலையில் புதிதாக ஏழு நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு கோயிலில் மராமத்து பணிகள் செய்து கடந்த ஆக. 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து மண்டலாபிஷேக விழாவிற்காக தினந்தோறும் அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.நேற்று முன்தினம் மாலை மண்டலாபிஷேக விழாவிற்கான பூஜை ஆரம்பிக்கப்பட்டு நேற்று காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகின. தொடர்ந்து ஹோமம் வளர்த்து 108 கலசாபிஷேகம் நடத்தப்பட்டு அம்மனுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு பூஜை,தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ