உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முத்துமாரியம்மன் அவதரித்த தினம்

முத்துமாரியம்மன் அவதரித்த தினம்

காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான, நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.காரைக்குடியில் மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமானது ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று அம்மன் அவதரித்த தினம் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்து முத்தாலம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு கல்லுக்கட்டி, செக்காலை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட வீதிகள் வழியாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் பலகார நெய்வேத்தியம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு கஞ்சி வழங்குதல் நிகழ்ச்சியும், இரவு வெள்ளித்தேரில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி