கூட்டணி ஆட்சி குறித்து யாரும் பேசவில்லை நவாஸ் கனி எம்.பி.,
காரைக்குடி: ''தி.மு.க., கூட்டணியில் யாரும் கூட்டணி ஆட்சி குறித்து பேசவில்லை,'' என, காரைக்குடியில் நவாஸ் கனி எம்.பி., தெரிவித்தார்.காரைக்குடி அழகப்பா பல்கலையில் மத நல்லிணக்க நாள் விழா நடந்தது. இதில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி கலந்து கொண்டார். பின் அவர் கூறியதாவது:தி.மு.க., கூட்டணியில் எந்த கட்சியும் கூட்டணி ஆட்சி குறித்து பேசவில்லை. 2026 ல் தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தில் பா.ஜ., காலுான்ற வாய்ப்பு இல்லை.பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்பது சந்தேகம் தான். தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நிர்பந்தத்தில் தான் கூட்டணி தொடர்கிறது. கீழ்மட்ட தொண்டர்களிடம் ஒற்றுமை இல்லை. காவல்துறை சரியாக இருப்பதால் தான் ஊடகங்களில் வெளியாகும் தகவலின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர் என்றார்.