மேலும் செய்திகள்
தடுப்புச்சுவர் இல்லாத கீழப்பட்டமங்கலம் ஊருணி
03-Dec-2024
திருக்கோஷ்டியூர்: கல்லல் ஒன்றியம் பட்டமங்கலம் -சொக்கநாதபுரம் ரோட்டில் தரைப்பாலத்தில் ஆற்றில் நீர் குறைந்ததை அடுத்து 3 நாட்களுக்கு பின்னர் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் மணிமுத்தாற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. அதில் பட்டமங்கலம்-சொக்கநாதபுரம் ரோட்டில் மணிமுத்தாறில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்திற்கு மேல் நீர் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்களும் செல்ல வில்லை.பட்டமங்கலத்திலிருந்து கருங்குளம், நரியங்குடி, கத்தாளம்பட்டு, பெரிய ஓலைக்குடி வழியாக 5 கிமீ. சுற்றி சொக்கநாதபுரத்திற்கு கிராமத்தினர் சென்றனர்.இந்நிலையில் நேற்று நீர் குறையத் துவங்கியது. மதியம் 2:00 மணி அளவில் பாலத்தில் நீர் வடிந்ததால் மீண்டும் வாகனப்போக்குவரத்து 3 நாட்களுக்கு பின்னர் துவங்கியது.
03-Dec-2024