இடிந்து விழும் போலீஸ் குடியிருப்பு: குடும்பத்தினர் அச்சம்
சிவகங்கை : சிவகங்கை டவுன் போலீஸ் குடியிருப்பில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் போலீசாரின் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை வாராச்சந்தை அருகே டவுன் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் குடியிருப்பு வளாகத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 வீடுகள் உள்ளது. இதில் தற்போது டவுன் போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர்.இந்த குடியிருப்புகள் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இக்கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி கூரைகள் பெயர்ந்து விழுகின்றன. சில கட்டடங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அடிக்கடி கான்கிரீட் சிமின்ட் காரைகள் பெயர்ந்து விழுவதால் போலீஸ் குடும்பத்தினர் அச்சத்தில் தவிக்கின்றனர்.