உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில்களில் பிரதோஷ வழிபாடு

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு மூலவருக்கும், நந்தீஸ்வரருக்கும் அபிஷேகம் நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்ஸவர் கோயில் உட்பிரகார வலம் வந்தார். திருப்புத்துார் ஆதித்திருத்தளிநாதர் ஆலயத்திலும் நந்திக்கும் மூலவருக்கும் அபிேஷக, ஆராதனை நடந்தது. * மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் அபிஷேக, ஆராதனை நடந்தது. இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலிலும் நடைபெற்றது. * சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தினி, சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நேற்று மாலை 4:30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர், முறையூர் மீனாட்சி சொக்கநாதர், கரிசல்பட்டி கைலாசநாதர், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை