புரட்டாசி பிரமோத்ஸவ திருக்கல்யாணம்
திருப்புத்தூர் : திருப்புத்தூர் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் நடந்தது.இக்கோயிலில் நவராத்திரி விழா, புரட்டாசி சனி உத்ஸவ நிறைவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.தொடர்ந்து யாகசாலையில் 108 கலசங்கள் பிரதிஷ்டை செய்து மகா யாக பூஜைகள், பூர்ணாஹூதி, கலசத்திற்கு அபிேஷக ஆராதனைகள் செய்தனர். மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாணத்திற்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். ராஜகோபுரம் முன்பாக மாலை மாற்றுதல், ஊஞ்சலில் எழுந்தருளல் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க இரவு 8:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியர், பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. தாமரை குழுமத்தினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.