உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 

ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை: ரேஷன் கடைகளுக்கு எடை குறைவின்றி பொருட்களை வழங்க வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாநில செயலாளர் கே.ஆர்., விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாயாண்டி, செயலாளர் திருஞானம், பொருளாளர் கவுரி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து, எடை குறைவின்றி ரேஷன் கடைகளுக்கு பொருளை வழங்குவது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி