உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை: மே 5ல் துவக்கம்

சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை: மே 5ல் துவக்கம்

மானாமதுரை: மானாமதுரையில் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா மே 5ல் துவங்குகிறது. கர்நாடக இசைக் கலைஞர்கள் இணைந்து இசை அஞ்சலி செலுத்த உள்ளனர்.கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் ஸத்குரு ஸதாசிவ பிரம்மேந்திராள் ஜீவசமாதி மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் சோமநாதர் சன்னதிக்கு பின்புறம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். மே 5ல் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள எம்.எஸ்.பி.ஏ., உண்ணாமலை அம்மாள் திருமண மஹாலிலும், மே 6ம்தேதி ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலிலும் நடைபெற உள்ள விழாவில் கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் ஆராதனை விழாவில் உஞ்சவ் விருத்தி, கோஷ்டி கானம்,விக்னேஸ்வர, வடுக, கன்யா, சுவாசினி, தம்பதி பூஜைகளும், இசை நிகழ்ச்சிகளும், சொற்பொழிவு நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை