கருத்தரங்கம்
பூவந்தி: பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் இலக்கியங்களில் மனிதநேயம் என்ற தலைப்பில் தமிழ் ஆய்வு துறை சார்பாக கருத்தரங்கம் நடந்தது. தமிழ் ஆய்வு துறை துணை தலைவர் பூங்குழலி முன்னிலை வகித்தார். முதல்வர் விசுமதி வரவேற்றார். பேராசிரியர் ராஜமோகன் தொகை இலக்கியங்களில் மனித நேயம் என்ற தலைப்பிலும், பேராசிரியர் ரஞ்சித்குமார் உரையாற்றினர். பேராசிரியை சாமூண்டீஸ்வரி நன்றி கூறினார்.