உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் செப்.,19ல் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்

சிவகங்கையில் செப்.,19ல் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்

சிவகங்கை : அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, செப்.,19ல் கவுன்சிலிங் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் செல்லம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் செய்வதற்கான கவுன்சிலிங் செப்.,19 அன்று காலை 9 மணிக்கு நடக்கும். வெளி மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கு செப்.,20ல் கவுன்சிலிங் நடைபெறும். சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் கவுன்சிலிங்கில் ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ