உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உயர்வுக்கு படி சிறப்பு முகாம் 

உயர்வுக்கு படி சிறப்பு முகாம் 

சிவகங்கை : சிவகங்கையில் உயர்வுக்கு படி முகாம் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து வரவேற்றார். முகாமில் உயர்கல்வியில் சேராத மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிறப்பு முகாமில் கல்லுாரி, தொழில்நுட்ப கல்லுாரிகளில் சேர எடுத்துரைத்தனர். துணை கலெக்டர் ரங்கநாதன், நேரு யுவகேந்திரா முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி உள்ளிட்டோர் பங்கேற்று, உயர்கல்விக்கான ஆலோசனைகளை வழங்கினர். கலெக்டரின் (தனி கிளார்க்) ஜெயப்பிரகாசம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ