உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகளுக்கு 50 சதவீத  மானியத்தில் தெளிப்பான் 

விவசாயிகளுக்கு 50 சதவீத  மானியத்தில் தெளிப்பான் 

சிவகங்கை: ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயி களுக்கு தெளிப்பான் வழங்கப்படுகிறது. இம்மாவட்ட விவசாயி களுக்கு மானியத்தில் தெளிப்பான் வழங்க அரசு ரூ.8 லட்சம் ஒதுக்கியுள்ளது. வட்டார அளவில் விசை, கை தெளிப்பான் விபரம் பெற்று வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைத்துள்ளனர். விசை தெளிப்பான் 31, பேட்டரி மூலம் இயங்கும் கை தெளிப்பான் 340 என 371 தெளிப்பான்கள் பெறப்பட்டுள்ளன. விசை தெளிப்பானுக்கு ரூ.3000 அல்லது 50 சதவீத மானியம் வழங்கப் படும். சிறு, குறு விவ சாயிகள், ஆதிதிராவிடர், பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை உண்டு. தெளிப்பான் தேவைப்படுவோர் அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை