விவசாயிகளுக்குபயிற்சி முகாம்
குன்றக்குடி: குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் 'அட்மா' திட்டத்தில் விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தலைமைவகித்தார். வேளாண்அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன் துவக்கி வைத்தார். செட்டிநாடு வேளாண் கல்லுாரி முதல்வர் பாபு, இணை பேராசிரியர் கமலசுந்தரி, பஞ்சாப் நேஷனல் வங்கி இயக்குனர் தினேஷ்பாபு, பேராசிரியர் ஜெபராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.