மாணவர்களுக்கு பயிற்சி
காரைக்குடி: அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படை சார்பில் கழிவுப்பொருட்களை உபயோகமான பொருட்களாக மாற்றும் பயிற்சி பட்டறை நடந்தது.தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமை ஏற்றார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரிட்டோ வரவேற்றார். மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள் கலியமூர்த்தி யோகானந்தம் வாழை இலை மூலம் பேனா, தொட்டி, விசிறி பொம்மைகள் செய்தல், காகிதத்தில் கலைப்பொருள் உருவாக்குதல் கயிறுகளில் பயனுள்ள பொருட்கள் செய்தல் உள்ளிட்ட செய்முறை பயிற்சி அளித்தனர். ஆசிரியர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.