உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை : சிவகங்கை அருகே கவுரிப்பட்டி சந்தனக் கருப்பர் கோயில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. மாடு முட்டியதில் 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.வடமஞ்சுவிரட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை இருந்து 16 காளைகளும் 144 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.ஒவ்வொரு போட்டியிலும் ஒரு காளையை அடக்க 9 மாடுபிடி வீரர்கள் இறக்கி விடப்பட்டனர். ஒரு காளையை அடக்க 25 நிமிடம் ஒதுக்கப்பட்டது.காளையை அடக்கும் மாடு பிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை