மேலும் செய்திகள்
புனித வெள்ளி சிறப்பு திருப்பலி
19-Apr-2025
சிவகங்கை: சிவகங்கை அருகே வல்லனி அன்னை தெரசா சர்ச் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.வல்லனி அன்னை தெரசா சர்ச் திறக்கப்பட்டதும், முதல் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ரூ.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கொடிமரத்தில் மறைமாவட்ட முதன்மை குரு ஆர்.அருள்ஜோசப்நேற்று மாலை 5:45 மணிக்கு கொடியேற்றி வைத்து, சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.பாதிரியார் வி.சூசைமாணிக்கம் கொடிமரத்தை புனிதப்படுத்தினார். கூட்டுத்திருப்பலியை பாதிரியார்கள் ஆரோக்கியதாஸ், அமல்ராஜ் நடத்தினர். மே 18 வரை நடைபெறும் விழாவில் தினமும்மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி, நற்கருணை பவனி நடைபெறும். 9 ம் நாளான மே 17 அன்று மாலை 6:00 மணிக்கு திருவிழா திருப்பலி தேர்பவனி நடைபெறும். 10ம் நாளான மே 18 அன்று திருவிழா நிறைவு திருப்பலி, புதுநன்மை பெருவிழா, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும். கொடியேற்ற விழாவில் பங்கு இறைமக்கள் பங்கேற்றனர்.
19-Apr-2025