திருக்கல்யாணம்
தேவகோட்டை: தேவகோட்டை கைலாசநாதபுரத்தில் உள்ள கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோயில் திருப்பணி செய்து நவ. 10ம் தேதி கும்பாபி ஷேகம் நடைபெற்றது. தினமும் மண்டல பூஜை நடத்தி நேற்று கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு மண்டாலாபி ஷேகம் நடந்தது. கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.