உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை, மானாமதுரை ஸ்டேஷன்கள் தரம் உயருமா

சிவகங்கை, மானாமதுரை ஸ்டேஷன்கள் தரம் உயருமா

சிவகங்கை: அம்ரூத் பாரத் திட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன்களை தரம் உயர்த்த வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி -காரைக்குடி - விருதுநகர் ரயிலை ஏழு நாட்களும் இயக்க வேண்டும். புதுச்சேரி -- கன்னியாகுமரி வாராந்திர ரயிலை, வாரம் இரு முறை இயக்கும் விதத்தில் மாற்றி அமைக்க வேண்டும். அம்ரூத் பாரத் 2 திட்டத்தில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன்களை தேர்வு செய்து, அங்கு பயணிகளுக்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். திருச்சி -- காரைக்குடி இடையே தினமும் இயங்கும் பாசஞ்சர் ரயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும். துாத்துக்குடி - - தாம்பரம் இடையே அருப்புக்கோட்டை, மானாமதுரை, புதுக்கோட்டை வழித்தடத்தில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை