உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / தமிழகத்தில் பா.ஜ. ஆட்சியில் மகளிருக்கு ரூ.2500 வழங்கப்படும்

தமிழகத்தில் பா.ஜ. ஆட்சியில் மகளிருக்கு ரூ.2500 வழங்கப்படும்

தென்காசி: தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி வந்ததும் மகளிர் உரிமை தொகையாக மாதம் ரூ. 2500 வழங்கப்படும். மாவட்டம் தோறும் இரண்டு நவோதயா பள்ளிகள் காமராஜர் பெயரில் துவக்கப்படும் என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தீய சக்திகளை வேரறுப்போம் என்ற தலைப்பில் பா.ஜ., பொதுக்கூட்டம் நடந்தது.திருநெல்வேலி எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தென்காசி மாவட்டம் சுதந்திர போராட்ட வீரர்களை கொண்ட பெருமைக்குரியது. அத்தகைய தேசியவாதிகளின் மண்ணாக இருந்த தென்காசியில் பா.ஜ., வளர்ச்சி துவங்கியுள்ளது. இப்போது 5 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றிபெற உறுதியாக செயல்படும். பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். சர்வதேச விளையாட்டு வீரர் சதீஷ்குமார் இன்று பா.ஜ.,வில் இணைந்துஉள்ளார். தமிழ்நாட்டை, குடும்பங்களை பாதுகாக்க 2026ல் பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும்.தி.மு.க., ஆட்சி மக்கள்நிம்மதியை குலைத்துவிட்டது. பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் குழந்தைகளை கூட பெற்றோர் சந்தேகப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் எதிலும் லஞ்சம். லஞ்சம் வாங்குவதை பெருமையாக கருதும் அரசு உள்ளது.சிறைக்கு சென்று வந்த அமைச்சர்கள் தங்களை காந்தியாக நினைத்து கொள்ளும் நிலை வந்துவிட்டது. தகுதியற்றவர்களும் தொடர்ந்து பதவியில் இருக்கின்றனர்.தமிழகத்தில் மும்மொழி கொள்கையை தி.மு.க., எதிர்க்கிறது. ஆனால் தி.மு.க., தலைவர்களின் குழந்தைகள் மற்றும் நிர்வாகிகளின் வாரிசுகள் மூன்று மொழி கல்வி முறையில் படித்து வருகின்றனர். தமிழகத்தில் 238 ஆசிரியர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். இது கல்வித் துறையின் மோசமான நிலையை காட்டுகிறது. கல்வி கற்றவர்கள் மட்டுமே நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல முடியும்.தமிழ்நாட்டில் பா.ஜ., ஆட்சி வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உரிமை தொகை வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும். அதற்கு கர்மவீரர் காமராஜர் பள்ளிகள் என பெயர் வைக்கப்படும். கல்வி மற்றும் மருத்துவ துறையில் உயர்ந்த தரத்தை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும். புளியங்குடி எலுமிச்சை பழத்திற்கு புவிசார் குறியீடு ஏப்ரல் மாதம் வழங்கப்படும். இதன் மூலம் ஏற்றுமதி அதிகரித்து விவசாயிகள் பயன்பெறுவர். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

Minimole P C
ஏப் 10, 2025 07:42

We cannot blame TN politicians. Many politicians started with good ideals and policies. But It is the TN people who are like lotus eaters always in a mood that they want to have more entertainment,less work more pay, cheating, all the time speaking lies, no regard for virtues and values etc. TN people never consider bribe and corruption is a crime. 99% of Govt officials accept bribe at the cost of the very Govt, which in turn affects people as extra/new tax that people never understand. Even 1litt of liquor sold at Rs.10K, drunkards ready to buy and drink and for this to mobolise the money chain snatching etc are done. what is a soceity in which we live? Politicians spoiled the values of the people in the name of Tamil, culture, etc. God save TN.


Guna Gkrv
மார் 14, 2025 14:32

மலை அண்ணாமலை அப்படி போடு சோழியன் குடுமி சும்மா ஆடாது முதலில் ஆட்சிக்கு வாங்க அப்புறம் பார்க்கலாம்


baala
மார் 14, 2025 12:26

இலவசமே கொடுக்க கூடாது என்று சொல்லும் நபர்களே சிந்தியுங்கள்.


Srivatsan
மார் 13, 2025 18:13

முதலில் உங்களுக்கு தமிழ் நாட்டில் டெபாசிட் கிடைக்குமா என்று பார் . அப்புறம் உண் ஊத்த வாயாலே பேசு .


Jayakumar
மார் 13, 2025 14:12

திமுக ஆட்சியில் கொடுக்கிறபோது பிச்சைக் காசு என்று உங்கள் கட்சியினர் சொன்னார்களே


baala
மார் 14, 2025 12:27

1500 அதிகமாக கொடுத்தால் அப்படி இல்லை. இவர்களை என்ன சொல்லுவது.


Jayakumar
மார் 13, 2025 14:10

பிச்சைக்காசு என்று உங்கள் கட்சியினர் விமர்சித்தார்களே அதையா கொடுக்கப்போகிறீர்கள் திமுக கொடுத்தால் தவறு நீங்கள் கொடுத்தால் சரியா


RAMKUMAR
மார் 13, 2025 09:19

2500 ரூபாய், தமிழ் பெண்களுக்கு , தமிழ் மண்ணுக்கு , தமிழ் தாய்க்கு , பிஜெபி தேர்தல் அறிக்கை . சபாஷ் . வருங்கால முதல்வர் அண்ணாமலை அவர்கள். பிஜெபி யால் மட்டுமே செய்ய முடியும். வாழ்த்துக்கள் பிஜெபி


anburose
மார் 13, 2025 09:17

ஹலோ அண்ணாமலை உங்க பி.ஜே.பி தலைவர் ஆட்சிக்கு வந்த எல்லோர் அகவுண்ட்லேயும் ரூ .1500000 போடுறத புருடா விட்டாரு . மதுரைல ஏயிம்ஸ் மருத்துவமனை கொண்டுவரதா பிலா விட்டாரு . இப்ப நீங்க அதுக்கு ஜால்ரா அடிக்க 2500 தராத ரீல் விடுங்க


RAMKUMAR
மார் 13, 2025 09:17

2500 ரூபாய், தமிழ் பெண்களுக்கு, தமிழ் மண்ணுக்கு, தமிழ் தாய்க்கு, பிஜெபி கொடுத்தால் உங்களுக்கு எதுவும் பிரச்னையை சார்


Ambedkumar
மார் 13, 2025 09:10

Central governments debt went up by 174% to Rs 155.6 lakh crore 57.1 percent of Gross domestic product as of March 31, 2023, according to the Finance Ministry. Agreed. But how the resource mobilised through public debt being used by the contral government and the TN government makes the difference. While the central government deploys it on CAPEX, the TN utises it mostly for FHREEBIES.


சமீபத்திய செய்தி