மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் செங்குந்தர் திருமண சேவை மையத்தின் 10ம் ஆண்டு திருமண சேவை மைய முப்பெரும் விழா நடந்தது.விழாவில் எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தஞ்சை மாவட்ட தலைவர் தொழிலதிபர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி தாளாளர் நடராஜன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.நாகராஜன், கலியபெருமாள், முருகவேள் ஆகியோர் வரவேற்றனர். முனைவர் ராஜமாணிக்கம் கலந்துகொண்டு பேசினார். விழாவில் நகர தலைவர் மணி, துணைத்தலைவர் தொழிலதிபர் சேதுராமன், ஓய்வு பேராசிரியர் வீரபாண்டியன், ஒப்பிலியப்பன்கோவில் முன்னாள் அறங்காவலர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்குந்தர் திருமண சேவை மையத்தினர் செய்திருந்தனர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025