உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பைக் - லாரி விபத்தில் இருவர் உயிரிழப்பு

பைக் - லாரி விபத்தில் இருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு அருகே பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சிவராமன், 29; இ - சேவை மையம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர், தன் உறவினரான ராஜசேகரன் மகன் அறிவுக்கரசு, 11, என்பவருடன், நேற்று மாலை தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கடைவீதியில் பொருட்களை வாங்கிக்கொண்டு, அரசு மருத்துவமனை எதிரில் டூ - வீலரில் சாலையை கடக்க முயன்றார்.அப்போது, சாலையின் மறுபுறத்தில், துவரங்குறிச்சியில் இருந்து வந்த லாரியின் பக்கவாட்டில் டூ - வீலர் மோதியது. இதில், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி, சிவராமன், அறிவுக்கரசு இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பேராவூரணி போலீசார் வழக்குப்பதிந்து, ராமநாதபுரம் மாவட்டம், கீழசிறுபூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ் கண்ணன், 23, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ