கணவருக்கு ஆயுள் தண்டனை விரக்தியில் பெண் தற்கொலை
தஞ்சாவூர்: கொலை வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர், முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி, 24. தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கொலை வழக்கில் சிவகுமாருக்கு அக்., 17-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த ராஜராஜேஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவக்கல்லுாரி போலீசார் ராஜராஜேஸ்வரி உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.