கருப்பு பேட்ஜ் அணிந்து பணி
தேனி:வீரபாண்டி அரசு கலை அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், பணி நிரந்தம் செய்யவும், அனைத்து மாதங்களுக்கும் ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கிடவும்,பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். இந்த நுாதன போராட்டத்தில் விரிவுரையாளர்கள் ராஜூ, ரியாஸ்அகமது, வெங்கடேசன், சுதா, திவ்யபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.