உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவி, மருமகளை தாக்கியவர் மீது வழக்கு

மனைவி, மருமகளை தாக்கியவர் மீது வழக்கு

பெரியகுளம் : பெரியகுளம் காயிதேமில்லத் நகரைச் சேர்ந்த காட்நைனார் மனைவி தவுலத்பேகம் 63. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளார். காட்நைனார் 68. சில பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, மனைவியிடம் பிரச்னை செய்து வந்தார் இதனால் கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளாக தவுலத்பேகம் கணவரை பிரிந்து 2 வது மகன் பராமரிப்பில் உள்ளார். காட்நைனார், மகன் வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் மருமகளை அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். வடகரை போலீசார் காட்நைனாரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !