முன்விரோத தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
ஆண்டிபட்டி : ஜம்புலிப்புத்தூரைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் 44, இதே ஊரைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் செந்தில்நாதன் மனைவியிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தரவில்லை. இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு நேற்று முன்தினம் செந்தில்நாதன் ஆண்டிபட்டி வைகை ரோட்டில் இருந்த போது நந்தகுமார் அவருடன் இருந்த கண்ணன் மற்றும் பெயர் தெரியாத மற்றொருவர் மூவரும் சேர்ந்து செந்தில்நாதனை தாக்கியதில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். செந்தில்நாதன் பேரில் ஆண்டிபட்டி போலீசார் 3 பேர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.