மேலும் செய்திகள்
கோயில்களில் பவுர்ணமி பூஜை
20-Aug-2024
போடி, : போடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில்பிரதோஷத்தை முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் சிவனுக்குசிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர்கோயில், மேலச் சொக்கநாதர் கோயில்,திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில்உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள்நடந்தன.பெரியகுளம்: கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பாலசுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பெரியகுளம் தென்கரை இந்திராபுரித் தெருவில் சிவனேஸ்வரர், தையல் நாயகி அம்மன், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் அதிகார நாகராஜருக்கும், நந்தி பகவானுக்கும், அருகம்புல் அணிந்து பூஜை நடந்தது. 12 ராசிக்கான சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.--
20-Aug-2024