மேலும் செய்திகள்
நினைவேந்தல் கூட்டம்
30-Jul-2024
தேனி: தேனியில் அரசு ஊழியர்கள் சங்க கட்டடத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில பேரவை விளக்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னச்சாமி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.சின்னச்சாமி முன்னிலை வகித்தனார். கூட்டத்தில் சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றி நிர்வாகிகளிடம் விளக்கினர். சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் பாவந்தன், பொருளாளர் ஆறுமுகம், அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட தலைவர் உடையாளி சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி ஈஸ்வரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
30-Jul-2024