உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 45.இவரது மனைவி சுதா 39. திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு காசநோயினால் முத்துப்பாண்டி இறந்தார். இதனால் மனநிலை சரியில்லாமல் இருந்த சுதா, நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !