உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடந்தாண்டில் 11,100 பிரசவங்கள் மாவட்ட தாய்சேய் நல கருத்தரங்கில் தகவல்

கடந்தாண்டில் 11,100 பிரசவங்கள் மாவட்ட தாய்சேய் நல கருத்தரங்கில் தகவல்

கம்பம் : தேனி மாவட்டத்தில் 2024 ல் 11,100 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் 6050 சிக்கலான பிரசவங்கள் ஆப்பரேஷன் மூலம் சிசிச்சையளிக்கப்பட்டதாக, தாய்சேய் பராமரிப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்ட கருத்தரங்கில் கூறப்பட்டது.தேனி மாவட்ட தாய்சேய் நல பராமரிப்பு ஒருங்கிணைப்பு குழு கருத்தரங்கம் தேனி மருத்துவக் கல்லூரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் முத்து சித்ரா தலைமை வகித்தார். நலப்பணிகள்இணை இயக்குநர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். குடும்ப நலத்துறை துணை இயக்குநர் அன்புசெழியன் இறப்பு இல்லா பிரசவம் என்ற தலைப்பில் பேசியதாவது :மாவட்டத்தில் பிரசவம் பார்க்கப்படும் மருத்துவமனைகளை மூன்று வகையாக தரம் பிரிக்கப்படுள்ளது. கர்ப்பிணிகளை கர்ப்ப பராமரிப்பு குழு மூலம் கண்காணிக்கின்றோம். அதில் அதிக சிக்கல் நிறைந்த கர்ப்பிணிகளை உன்னிப்பாக கவனித்து அவர்களை எந்த மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.ஒவ்வொரு கர்ப்பிணிகளையும் பரிசோதிக்கும் டாக்டர்களின் மருத்துவ அறிக்கையினை தமிழக அரசின் பிக் மீ 3.0 ( PlCME) Pregnancy and infant Control monitoring and Evaluation) என்றும் ஆன்லைன் சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் கர்ப்பம் தரித்தவுடன் 'பிக் மீ 'எண் வழங்கப்படும். இதன் வாயிலாக கர்ப்பிணிக்கு தேவையான மருத்துவ உதவி, பரிசோதனை, கர்ப்ப காலத்தில் எந்த நேரத்தில் எவ்விதமான சேவை தேவைப்படும்,. எந்த மருத்துவமனையில் பிரசவிக்க வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்படும். மேலும் இந்த 'பிக் மீ' எண் இருந்தால் மட்டுமே பிரசவிக்கும் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கிடைக்கும். மாவட்டத்தில் 2024 ல் 11,100 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது. அதில் 6050 சிக்கலான பிரசவம் என கண்டறியப்பட்டு ஆப்பரேஷன் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்தாண்டு 5 கர்ப்பிணிகள் மட்டும் இறந்துள்ளனர். என்றார்.இந்த கூட்டத்தில் மகப்பேறு துறை தலைவர் நந்தினி, குழந்தைகள் நல பேராசிரியர் செல்வக்குமார், அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய மகப்பேறு டாக்டர்கள், நர்சுகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி