உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெருமாள் கோயிலில் பூஜை செய்து நெல் பயிர் பரவு காவல் பணி துவக்கம்

பெருமாள் கோயிலில் பூஜை செய்து நெல் பயிர் பரவு காவல் பணி துவக்கம்

சின்னமனுார்: சின்னமனுார் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள நெல் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதால், விலங்கையா மற்றும் லட்சுமிநாராயண பெருமாள் கோயில்களில் பூஜை செய்து விவசாய சங்கத்தினர் காவல் பணியை துவக்கி உள்ளனர்.இந்த வட்டாரத்தில் சின்னமனுார், பூலானந்தபுரம், கருங்கட்டான்குளம், மார்க்கையன்கோட்டை, குச்சனுார், சீலையம்பட்டி போன்ற ஊர்களில் நெல் சாகுபடி நடக்கிறது. தற்போது முதல் போகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதால் பகல் நேரங்களில் ஆடு, மாடுகள் மேய்ந்து விடாமல் இருக்கவும், இரவு நேரங்களில் திருடு போய்விடாமல் இருக்கவும், பரவு காவல் சங்கம் தங்களின் காவல் பணியை நேற்று துவக்கியது. விவசாய சங்கத் தலைவர் ராஜா தலைமையில் விலங்கையா கோயில், லெட்சுமி நாராயண பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, காவல் பணியை துவக்கினர். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள், காவல் பணி மேற்கொள்வோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ