உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பகவதியம்மன் கோயில் திருவிழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

பகவதியம்மன் கோயில் திருவிழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கம்பம்: கம்பம் காமுகுல ஒக்கலிகர் சமுதாயத்தின் சார்பில் பகவதியம்மன் கோயில் திருவிழா கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த மாட்டு வண்டி பந்தத்தில் காளைகள் சீறிப்பாய்ந்தன. கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழா காமுகுல ஒக்கலிகர் சமுதாயத்தின் சார்பில் மஞ்சள் நீராட்டத்த்துடன் விழா துவங்கியது. இரவு பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள். நேற்று காலை கம்ப மெட்டு ரோட்டில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான், தேன்சிட்டு, பூஞ்சிட்டு என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் பங்கேற்று போட்டியில் சீறிப்பாய்ந்தன. மாலையில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர். நூற்றுக்கணக்கான வண்டிகளில் பக்தர்கள் வேடமணிந்து வண்டி வேசம் நிகழ்ச்சி பங்கேற்றனர். இரவு அம்மன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி