உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெரியகுளம்: பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி தங்கம்மாள் 38. முருகன் இறந்து விட்டார். தங்கம்மாள் தனது 16 வயது மகளுடன் குடியிருந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் 50, உறவினர்கள் மகேஸ்வரி 39, முத்துலட்சுமி 34, முத்துராஜா 32, ஆகியோர் தங்கம்மாள் வீட்டு முன் நின்றுகொண்டு அவதூறாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை கேட்ட மைனர் பெண்ணை, முத்துராஜா உட்பட 4 பேரும் தாக்கினர். மைனர் பெண் புகாரில் தென்கரை போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !