உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வரதட்சணை கொடுமை கணவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை கணவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு

போடி: போடி அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் நிஷாந்தி 24. இவரும் துரைராஜபுரம் கருப்பசுவாமி கோயில் தெருவை சேர்ந்த ரமேஷ் ராஜா 33. என்பவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். கணவர் ரமேஷ் ராஜா, மாமனார் அரசன் 60. இருவரும் வரதட்சணையாக 10 பவுன் நகை வாங்கி வரும் படி நிஷாந்தியை அடித்து, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனை கேட்க சென்ற நிசாந்தியின் பெற்றோரையும் தகாத வார்த்தையால் பேசி உள்ளனர். ரமேஷ் ராஜாவின் சகோதரர்கள் சின்னன் 35, சுரேஷ் 40, இவரது மனைவி சுகந்தி 38, ஆகியோர் உடந்தையாக இருந்ததாக நிஷாந்தி புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் கணவர் ரமேஷ் ராஜா, மாமனார் அரசன் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை