மனைவியை தாக்கிய கணவர் உட்பட நால்வர் மீது வழக்கு
தேனி: பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெரு ராமராஜ் 37. இவரது மனைவி நிவேதா 27. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டது. கணவர் ராமராஜ் மனைவியை வேறு ஒருவர் மூலம் தவறாக பேச கூறியதாக அறிந்து கணவரிடம் தகராறு செய்தார். கணவர்,மாமியார் நாகரத்தினம், நாத்தனார் அமுதா, அவரின் கணவர் கர்ணன் ஆகிய நால்வர் இணைந்து நிவேதாவை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றினர். நிவேதா பெற்றோர் வீட்டில் இருந்தார். குழந்தைகளை, கணவர் அழைத்து சென்றார். நிவேதா புகாரில், தேனி அனைத்து மகளிர் போலீசார் கணவர் ராமராஜ், மாமியார் நாகரத்தினம்,அமுதா அவரது கணவர் கர்ணன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.