பிளக்ஸ் பேனர் வைத்தவர் மீது வழக்கு
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி எஸ்.ஐ., மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகில் அனுமதியின்றிவைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்தது. பிளக்ஸ் போர்டுவைத்த சக்கம்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாண்டி 35, என்பதை தெரியவந்தது.அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டை அப்புறப்படுத்திய போலீசார் அதனை வைத்த பாண்டி மீது வழக்கு பதிவு செய்தனர்.