மேலும் செய்திகள்
சர்வதேச மனநல தின ஊர்வலம்
14-Oct-2025
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த தீபன் குமார். இவரது நண்பர்கள் பிரவீன், சுரேந்தர், அன்பு, தமிழ் ஆகியோர் கையில் கம்பு, கம்பி, மதுபாட்டில்களை வைத்திருந்தனர். மேட்டுவளவு காளியம்மன் கோயில் அருகே தாங்கள் தான் இந்த ஏரியாவில் ரவுடி என கூறினர். கம்பியால் ரோட்டை சேதப்படுத்தியும், மதுபாட்டில்களை ரோட்டில் எரிந்து, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்தனர். தேவதானப்பட்டி சிறப்பு எஸ்.ஐ., சந்தானக்குமார் புகாரில் எஸ்.ஐ., வேல் மணிகண்டன் 5 பேரை தேடி வருகிறார்.
14-Oct-2025